மரணம் நெருக்கிய
பலவீனப்பிண்டங்களை
உன் குரல்வளை நரகம்
சிறைபடுத்திக்கொண்டது
காதை கிளிக்கும் கரங்கள்
விலங்குகளினால் சூடப்பட்டன
கிழறிய பிணங்களின் நாற்றங்களை
உதடுகள் கிளிந்த புன்னகையால் நீ
தளுவிக்கொண்டாய்
விசமாய் பால் சுரந்திராத கணங்களிற்க்காக
உன் தாய் மார்பை அறுத்துக்கொண்டாள்
குருதி கசிந்திருந்த வானம்
உன் வருகையின் பின்பதாய்
இறந்துபோனது
உன் பாடல்களில் நீ
உன்னையும் அடிமையாக்கிக்கொண்டிருந்தாய்
உன் விரல்களில் தெறித்திருந்த
சதைகளின் கனத்தை நீ
உன் குரல்வளைகளால்
நெரித்துக்கொண்டிருப்பதை
அரசன் ரசித்துக்கொண்டிருந்தான்
supper da
ReplyDelete//உன் விரல்களில் தெறித்திருந்த
ReplyDeleteசதைகளின் கனத்தை நீ
உன் குரல்வளைகளால்
நெரித்துக்கொண்டிருப்பதை
அரசன் ரசித்துக்கொண்டிருந்தான்//
சரிதான்....
கவிதை நல்லாயிருக்குங்க....
This comment has been removed by a blog administrator.
ReplyDelete