கிருத்திகன் கவிதைகள்

Pages

20 September 2010

கொலைகள் பற்றி தொடரும் கனவு



கொலைகளற்ற கனவுகளிற்க்காய் நான்
மறுத்திருந்த இரவுகள்
அழகிய தருணங்களை உனக்காய்
செதுக்கிய என் அஜீரனமற்ற பொழுதுகள் சகி...

மரணத்தில் எஞ்சிய என்னை
அதட்டிக்கொள்வதால்
சலனமற்ற இரவுகளில் குழையும்
எல்லோரும் எப்படியோ
வெற்றி கொள்ள்கிறார் .

அதிகாரம் கனத்த சொற்களை
பாட மறுத்ததற்க்காய் என்னை
தோர்க்கடித்த எல்லோரும்
உரிமை மீறிய அதட்டலோடு
எப்படியோ தண்டித்து போகின்றார்கள்...

சாட்சிகள் அற்ற நிரபராதியின் கழுத்தை இறுக்க
இன்னமும் எத்தனை கயிறுகளை
இவர்கள் பின்னிக்கொண்டிருக்க போகிறார்கள்

ஆயினும் ..,

கொலைகளற்ற கனவுகளிற்க்காய் நான்
மறுத்திருந்த இரவுகள்
அழகிய தருணங்களை உனக்காய்
செதுக்கிய என் அஜீரனமற்ற பொழுதுகள் சகி...

அருகிலிருக்கும் உன்னை
தழுவிக்கொள்ள முடியாமலிருக்கும்
வலியிழந்த கைகளின் பற்றுதலில் நீ
பூரிப்பதாய் முறுவும் பாசாங்குகளில் ,
நிறையும் என் கூனல்
களில் மட்டுமே
நான் எப்போதும் குற்றம் சுமக்கிறேன்...

உயிர் வலி ஓலம் நிறைந்த புழுதியில்
கனமின்றிக் கடந்த எந்த பொழுதுகளை
நீ அசை போட முடியும் ?
சொல் ...

01 September 2010

மிருகத்தைக்காக்கும் கடவுளின் அசரீரிகள்




சொற்கள் நனைந்திருந்த என் பாடலில்
பரிட்சியமற்ற எந்த வார்த்தைகளின்
உறுத்துதலிர்க்காக என்னை நீ
தண்டித்துக்கொண்டிருக்கிறாய்

குருதி வழியும் கால்களிற்க்காக
என் சுவடுகளை அந்நியப்படுத்தும் நீ
களைத்திருந்த என் குரல்வளையினை கீறுவதால்
பலவீனம் மிகுந்திருந்த எனை விலங்கிடுவதால்
துளிர்க்கும் உன் வீரத்தை யாரோடு பகிரப்போகின்றாய்

நினைவு கனத்த பாடலிற்க்காக
எனை விலங்கிடும் உன்னை
அதிகாரப்படுத்தும் அகலம் நிறைந்த
சுவடுகள் கொண்ட உன்னை
சகிக்க முடியாத கொடூரம் நிறைந்த
குழந்தைகள் வீரிடும் முகம் கொண்ட உன்னை
உன்னை மட்டும்
எப்படி கடவுளின் அசரீரிகள் இன்னமும்
காத்துக்கொண்டே இருக்கின்றன