கொலைகளற்ற கனவுகளிற்க்காய் நான்
மறுத்திருந்த இரவுகள்
அழகிய தருணங்களை உனக்காய்
செதுக்கிய என் அஜீரனமற்ற பொழுதுகள் சகி...
மரணத்தில் எஞ்சிய என்னை
அதட்டிக்கொள்வதால்
சலனமற்ற இரவுகளில் குழையும்
எல்லோரும் எப்படியோ
வெற்றி கொள்ள்கிறார் .
அதிகாரம் கனத்த சொற்களை
பாட மறுத்ததற்க்காய் என்னை
தோர்க்கடித்த எல்லோரும்
உரிமை மீறிய அதட்டலோடு
எப்படியோ தண்டித்து போகின்றார்கள்...
சாட்சிகள் அற்ற நிரபராதியின் கழுத்தை இறுக்க
இன்னமும் எத்தனை கயிறுகளை
இவர்கள் பின்னிக்கொண்டிருக்க போகிறார்கள்
ஆயினும் ..,
கொலைகளற்ற கனவுகளிற்க்காய் நான்
மறுத்திருந்த இரவுகள்
அழகிய தருணங்களை உனக்காய்
செதுக்கிய என் அஜீரனமற்ற பொழுதுகள் சகி...
அருகிலிருக்கும் உன்னை
தழுவிக்கொள்ள முடியாமலிருக்கும்
வலியிழந்த கைகளின் பற்றுதலில் நீ
பூரிப்பதாய் முறுவும் பாசாங்குகளில் ,
நிறையும் என் கூனல்களில் மட்டுமே
மறுத்திருந்த இரவுகள்
அழகிய தருணங்களை உனக்காய்
செதுக்கிய என் அஜீரனமற்ற பொழுதுகள் சகி...
மரணத்தில் எஞ்சிய என்னை
அதட்டிக்கொள்வதால்
சலனமற்ற இரவுகளில் குழையும்
எல்லோரும் எப்படியோ
வெற்றி கொள்ள்கிறார் .
அதிகாரம் கனத்த சொற்களை
பாட மறுத்ததற்க்காய் என்னை
தோர்க்கடித்த எல்லோரும்
உரிமை மீறிய அதட்டலோடு
எப்படியோ தண்டித்து போகின்றார்கள்...
சாட்சிகள் அற்ற நிரபராதியின் கழுத்தை இறுக்க
இன்னமும் எத்தனை கயிறுகளை
இவர்கள் பின்னிக்கொண்டிருக்க போகிறார்கள்
ஆயினும் ..,
கொலைகளற்ற கனவுகளிற்க்காய் நான்
மறுத்திருந்த இரவுகள்
அழகிய தருணங்களை உனக்காய்
செதுக்கிய என் அஜீரனமற்ற பொழுதுகள் சகி...
அருகிலிருக்கும் உன்னை
தழுவிக்கொள்ள முடியாமலிருக்கும்
வலியிழந்த கைகளின் பற்றுதலில் நீ
பூரிப்பதாய் முறுவும் பாசாங்குகளில் ,
நிறையும் என் கூனல்களில் மட்டுமே
நான் எப்போதும் குற்றம் சுமக்கிறேன்...
உயிர் வலி ஓலம் நிறைந்த புழுதியில்
கனமின்றிக் கடந்த எந்த பொழுதுகளை
நீ அசை போட முடியும் ?
சொல் ...
கனமின்றிக் கடந்த எந்த பொழுதுகளை
நீ அசை போட முடியும் ?
சொல் ...