கிருத்திகன் கவிதைகள்

Pages

13 May 2010

தலை தரும் ஆடுகள்




மரணம் நெருக்கிய
பலவீனப்பிண்டங்களை
உன் குரல்வளை நரகம்
சிறைபடுத்திக்கொண்டது

காதை கிளிக்கும் கரங்கள்
விலங்குகளினால் சூடப்பட்டன

கிழறிய பிணங்களின் நாற்றங்களை
உதடுகள் கிளிந்த புன்னகையால் நீ
தளுவிக்கொண்டாய்

விசமாய் பால் சுரந்திராத கணங்களிற்க்காக
உன் தாய் மார்பை அறுத்துக்கொண்டாள்

குருதி கசிந்திருந்த வானம்
உன் வருகையின் பின்பதாய்
இறந்துபோனது

உன் பாடல்களில் நீ
உன்னையும் அடிமையாக்கிக்கொண்டிருந்தாய்

உன் விரல்களில் தெறித்திருந்த
சதைகளின் கனத்தை நீ
உன் குரல்வளைகளால்
நெரித்துக்கொண்டிருப்பதை
அரசன் ரசித்துக்கொண்டிருந்தான்

3 comments:

  1. //உன் விரல்களில் தெறித்திருந்த
    சதைகளின் கனத்தை நீ
    உன் குரல்வளைகளால்
    நெரித்துக்கொண்டிருப்பதை
    அரசன் ரசித்துக்கொண்டிருந்தான்//

    சரிதான்....

    கவிதை நல்லாயிருக்குங்க....

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete