கிருத்திகன் கவிதைகள்

Pages

23 December 2010

வீரியமற்ற தோள்கள்








மௌனம் நிரப்பிய
வலிகளுக்குள்
புதைந்து போகின்றன
இருள் நாட்கள்

அடிமைகள்
தின்று
கழிக்கும் நாட்களில்
எஞ்சி போகும்
வரலாறுகளை
அதிகாரம் மிகுந்த
உன் சொற்கள்
தீர்மானிக்கின்றன

ரணம் மிகு
நாட்களின்
இருப்பை
காவிச் செல்வதற்காய்
கூனல்களை
ஏற்றுக் கொள்கிறன
வீரியமற்ற தோள்கள்.