நகர் எரித்த வானரங்களின்
மனிதாபிமான அதட்டலில்
எல்லோரும்
புல்லரித்துப்போயிருந்த போது
பதுங்குகுளிகளை மூடிய
சாம்பல் நகரத்திற்க்கு நாம்
பொதி சுமக்க பிரார்த்திக்கப்பட்டோம்
குருதி கசியும் நிலங்களை நனைத்தபடி
கூசிய கால்கள் நகர்ந்தபோது
தீ நிறைத்து ஓய்ந்து போன
நிசப்த வெளிகள் எமை
மரணம் நோக்கி அழைத்தன
கனவுகள் புதைந்த வெளிகளில்
தோழ் கனத்த பொதிகளின் கூனலை
வானரங்கள் வாய்கிழிந்த
நகைப்புடன் வரவேற்றன
தீ மிதித்த கால்களின்
கொதிப்புக்கள்
தொடர்ந்துகொண்டே இருக்கும்,
நிசப்த வெளிகளுக்குள்மிகுந்த
மரண பயத்துடன்
No comments:
Post a Comment