கிருத்திகன் கவிதைகள்

Pages

21 May 2010

கனவுகள் புதைந்த வெளி




நகர் எரித்த வானரங்களின்
மனிதாபிமான அதட்டலில்
எல்லோரும்
புல்லரித்துப்போயிருந்த போது
பதுங்குகுளிகளை மூடிய
சாம்பல் நகரத்திற்க்கு நாம்
பொதி சுமக்க பிரார்த்திக்கப்பட்டோம்

குருதி கசியும் நிலங்களை நனைத்தபடி
கூசிய கால்கள் நகர்ந்தபோது
தீ நிறைத்து ஓய்ந்து போன
நிசப்த வெளிகள் எமை
மரணம் நோக்கி அழைத்தன

கனவுகள் புதைந்த வெளிகளில்
தோழ் கனத்த பொதிகளின் கூனலை
வானரங்கள் வாய்கிழிந்த
நகைப்புடன் வரவேற்றன

தீ மிதித்த கால்களின்
கொதிப்புக்கள்
தொடர்ந்துகொண்டே இருக்கும்,
நிசப்த வெளிகளுக்குள்மிகுந்த
மரண பயத்துடன்

No comments:

Post a Comment