கிருத்திகன் கவிதைகள்

Pages

05 April 2010

பொய்த்துப்போன புன்னகை




சிறுபுள்ளிகளால் நிறப்பமுனைந்த இடைவெளிகளை
என் காதை அறைந்த சப்தம் கிழறியபோது
நீ கடைசியாய் புன்னகைத்ததை
ஒரு அடிமையாய் நான் ரசித்துக்கொள்ளும்
இநத சாம்பல் மேட்டில்
பூக்களின் இருப்பு அவசியமற்றது

நீளத்தெருக்களில்
நீ பதித்த சுவடில் எல்லாம்
என் உயிரும் கொட்டிபோகிறது தோழி
ஆயினும்
நாம் திரிந்த மணல்கள்
குருதி வழியும் என் பாதங்களில்
இப்போது ஒட்டிக்கொள்வதில்லை

உருகி வழியிம் என் கண்ணீரை
ஒரு அடிமையின் கண்ணீராய்
எப்படி உனக்கு நான் பரிசளிக்கப்போகின்றேன்

என் தனிமை இரவுகள்
நகரும்போதெல்லாம்
உனை சுமப்பதாய்ச்சொன்ன
என் முதுகை
ஒரு அடிமையின் முதுகை
மிருகம் ஆக்கிரமித்து கொண்டபோது
உன் உயிர்வலிப்புன்னகை பொய்த்துப்போனது தோழி.

No comments:

Post a Comment