கிருத்திகன் கவிதைகள்

Pages

01 April 2010

உன் வெளி





உன் உடலை நீ
தீயால் வரைந்தபோது
அழுகிய பிண்டங்களாய்
நாம் நிறைந்திருந்தோம்.

பாலைவனமாகிப்போன எம்
வெளிகளில் எல்லாம் உன்
வன்மம் நிறைந்தபோது
எம் முகங்களை நாம் புதைத்துக்கொண்டோம்.

நீ கீறிய சிதையில்
எம் நிறம் மாறிப்போனது.

எம் நாற்றத்தில் தீ
எம்மில் விலகிக்கொண்டது.

உன் பார்வையில் விழிக்கமுடியாமல்
எம் சதையின் சீழ்களை நாம் நக்கிக்கொண்டோம்.

உன் வெளிகளில் நீ சுதந்திரமாய் இருந்தாய்


1 comment: