இரத்தம் வெளிறிப்போன
அவன் சீருடையில்
நட்சத்திரங்கள்
நரகவேதனையை
அனுபவித்துக்கொண்டிருந்தன
அந்தரத்தில்
திரிந்து கொள்வதாய்
அவன்
இறுமாந்து கொண்டான்
தோல்களின்
கனம் மிகுந்த
சப்பாத்துகளின் கீழாய்
நிர்வாணப்பிண்டங்கள்
சிதைந்து கொண்டன
அந்தரத்தில்
திரிந்து கொள்வதாய்
அவன்
இறுமாந்து கொண்டான்.
No comments:
Post a Comment