கிருத்திகன் கவிதைகள்

Pages

15 March 2010

சபிக்கப்பட்ட ஓலம்






















குருதித்திரையால் மறைக்கப்படும்
எமது
கனவுகளில் - உன்
செருகிய பிண்டங்களில் இருந்தும்
கழரமறுக்கும் சவள்களில்

சன்னம் கீறிய
இதைய வலிகளின்
சபிக்கப்பட்ட ஓலத்தின்
குரல்களிற்க்காய்

எல்லோரினதும் சாளரங்கள்
சாத்தப்படுகின்ற போது

கோர வன்மத்திற்க்கான
உனது
புகைப்படங்கள்
இழித்துநிற்க்கிறன.

கொண்டாடப்படும் உனது
சந்தோசங்களிற்க்காய்
ஆயிரம் குழந்தைகளின்
தாய்ப்பாலை
நீ
தடை செய்கின்றாய்

வெற்றிகொண்ட உன்
இரவு விருந்திற்க்காய்
மெல்லிய பூக்களின்
குருதியை
நீ
ருசிக்கின்றாய்

தலை துண்டிக்கப்பட்டு
ஊருகின்ற
இறுதித்துடிப்பின் வலி
உணா்ந்திருக்கும் புளுவின்
எதிர்பார்ப்பின் மீதும்
நெம்புகோல்களை
செலுத்தும்
நீ
இப்போதும்
சந்தோசப்பட்டுத்தான்கொள்கிறாய்.


No comments:

Post a Comment