
சோர்வுகளின் அசதியில்
வெறும் தரை மீதும்
தலையணை இன்றியும்
அயர்ந்து போவாள்
சாமரக்காற்றுக்கள் மேனியைத்தழுவின
அரியனை மீதில் அலங்கரிக்கப்பட்டிருந்தாள்
அவளின் ஏவலிற்க்காகவே
உயிர்தறிக்கவும் காத்திருந்தன சேனைகள்
சோர்வுகளின் அசதியில்
வெறும் தரை மீதும்
தலையணை இன்றியும்
அயர்ந்து போவாள்
அந்த தருணங்களின் இடையூறுகள்
ஒரு பெளார்ணமி அழகில் தெறிக்கும்
வானவில்லின் பிரமிப்பை போன்ற
அவளின் கனவுகளை
கலைத்துக்கொண்டேயிருந்தன.
என் முதல்பதிவு
ReplyDelete